murali83bdu@gmail.com. Powered by Blogger.

Thursday, September 30, 2010

கவிஞர் ரவிதாசனின் அற்புதமான வரிகள்..

கவிஞர் ரவிதாசனின் அற்புதமான வரிகள்..


குங்குமம் வழியில்....

'' என்
ஒவ்வொரு கவிதைப் புத்தகத்திற்கும்
இலவச இணைப்பாக
லட்டு ஒன்று தரலாமென
நினைக்கிறேன்
லட்டு ஒன்றுக்கு
புத்தகம் இலவசமெனச்
சொல்லிவிட்டால்
என்ன செய்வது?''

--

முற்போக்கு

ஒரு முற்போக்கு
இயக்கத்தவர்
மிகுந்த கோபத்துடன்
'விதவை மறுமணம்' பற்றி
அவசரம் அவசரமாகக்
குறும்படம் எடுத்தனர்.

நட்பிருந்தாலும்
தகுதியான விதவைக்கு
தாலிகட்டாத
'சபைப்பேச்சு' மனிதர்கள்.

--

பொய் கேள்வியும்
பொய் பதிலும்

தமிழன் ஒருவன்
ஆர்வமாய் என்
சாதியை கேட்டான்.

'தமிழன்' என்றேன்
நான்.

தமிழன் என்பது
சகலர்க்கும் தெரிந்த மெய்
சாதியை சொல்
என்றான் அவன்

'முதலியார்' என்றதும்
முழு சம்மதமாய் -
ஓராண்டு கழித்து
ஓடிவந்து கேட்டான்
'நீங்கள் வன்னியராமே!'

--

மனிதர்கள்

இந்து வெறியன்
மசூதியை இடிக்க,

இஸ்லாம் வெறியன்
எதிரி என்று தாக்க,

இடையில் மடிந்தனர்
இவை எதுவும்
தெரியாத
'மனிதர்கள்!'

--
விலகல்

சாதாரணமானவளாய்
நான் நினைத்துவிடாமல்
இருக்க

நீ
ஒவ்வொரு முறையும்
கால்மணி நேரமாவது
காக்க வைக்கிறாய்!

நீ 'கர்வக்காரியோ'
என்றெண்ணி

நான்
கொஞ்சம் கொஞ்சமாக
விலகி போகிறேன்!

--

செவி வழியில்

நானும் கருப்பு
அவனும் கருப்பு

நானும் சைவம்தான்
அவனும் சைவம்தான்

அவனை போலவே
எனக்கும் உறுப்புக்கள்

நான் படித்த பள்ளியில் தான்
அவனும் படித்தான்

தேநீரைக்கூட
அண்ணாந்து குடிக்கும்
அர்த்தமுள்ளவர்கள் நாங்கள்
என்றாலும்

நாங்கள் கேட்டுக் கொண்டால்தான்
தெரிகிறது
எங்கள் சாதி.

--

உண்மைதான்

''மரணம் விரைவில் வருகிறது
மனம் திரும்புங்கள்''என்றார்
பாதிரியார்

மனம் திரும்பினோம்;

அலையடித்துச் சர்ச்சில்
அழிந்து போனார்கள்
அறுபது பேர்!

--

கவிதை

புரியக்கூடாது எனச்
சபதமெடுத்து
என் நண்பர்
புதுக்கவிதை எழுதினார்

புரியவில்லை என்றேன்
மீண்டும் படி என்றார்

புரியவில்லை என்றேன்
மீண்டும் படி என்றார்

புரியவில்லை என்றேன்
மகிழ்ச்சியோடு சொன்னார்

'எது புரியவில்லையோ
அதுதான் நல்ல கவிதை' என்று.

--

திருமணதிற்கு முன்..

விரும்புகிறாள் என
உறுதியாகத் தெரிந்தும்

யாருமில்லையென
என் இருவிழிகள்
அறிந்தும்

''தொட்டுத் தொலையகூடாதா'' என
அவள்
உதடுகள் சைகையில் உலறியும்

காவல் காத்து நிற்கிறது
பாழாய்ப் போன
என் 'பண்பாட்டுக் கூச்சம்'

--

அன்றும் இன்றும்

அன்று
கொலையும் செய்தாள்
பத்தினி

அந்நியன் தொட்டானென்று!

இன்று
கொலைகள் செய்தாள்
பெண்மணி

கணவன் தொடுகிறானென்று !

--

தீத்துண்டுகள்

மதுக்கடை அதிபர்
திருமண மண்டபம் கட்டினார்

மது அருந்த வேண்டாம் என்ற
அறிவிப்புடன்..

--
நான்கு பூனைகள்
குறுக்கே ஓடியும்

விழிப்புணர்வுடன் நடந்தேன்
ஒன்றும் நடக்கவில்லை.

--
ஒரே அனுபவத்தை
ஆயிரம் முறை பட்டும்
திருந்தி
நிமிர்ந்த போது
எனக்கு
வயது முப்பது.

--

காந்தீயம்

இளைய தலைமுறை
அறியவில்லையென
விசுவாசமுள்ள
தொண்டர் ஒருவர்
காந்தி படத்தை
மாட்டி வைத்திருந்தார்..

பிராந்திக்கடையில்!

--

பசி நல்லிணக்கம்

பல கடவுளை
நம்பி
பயனில்லை என
வெம்பி

ஒரே ஏசுவை
நம்பி

தன் பெயரை
மாற்றிக்கொண்டாள் சரஸ்வதி

நேற்று
அப்துல் காதர் தந்த
ஆயிரம் கடனை
அடைப்பதற்காக

முன்னூறு ரூபாய்
அதிகமாய் உள்ள
முனுசாமி கம்பெனியில்
சேர்ந்து

வெள்ளிக்கிழமை தோறும்
திருப்பதி ஆண்டவருக்குத்
தீபம் காட்டும் அவளிடம்

''மத நல்லிணக்கம்
தெரியுமா'' என்றேன்

அது
''பசியை விடவும்
பெரியதா'' என்றாள்.

Sunday, September 26, 2010

தலித் அதிகாரிகள்: குறுக்கப்படும் சமூகநீதி

கட்டுரை
தலித் அதிகாரிகள்: குறுக்கப்படும் சமூகநீதி
ஸ்டாலின் ராஜாங்கம்

“நம் செயல் ‘எதிரி’களால் பாராட்டப்படுமெனில் நாம் தவறாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோமென்று பொருள்” என்பது தமிழக மேடைகளில் புழங்கிவரும் புகழ்பெற்ற முழக்கம். தலித் வகுப்பைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான உமாசங்கர் போலிச்சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்ததாகத் திமுக அரசாங்கத்தால் குற்றம் சுமத்தப்பட்டுத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள செயல் இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலனின் பாராட்டுக்குள்ளாகியிருக்கிறது. தலித் அதிகாரிக்கெதிராக, ஆதிக்கக் கருத்தியலுக்கு வலுவூட்டும் விதத்தில் செயல்பட்டதால் இந்து முன்னணியிடமிருந்து ‘பெரியாரின் சீடர், தலித்துகளின் தோழர்’ கருணாநிதியின் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள இப்பாராட்டுக் குறித்து அவரது தீவிர/வெகுசன இதழியல் ஆதரவு அறிவுஜீவிகள் என்ன நினைக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

இது பழிவாங்கும் நடவடிக்கை எனச் சொல்லியிருக்கிறார் உமாசங்கர். கடந்த மாதம் தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் தான் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து ஆதாரங்களுடன் விவரித்திருக்கிறார். மின்னஞ்சல் மூலம் பலருக்கும் படிக்கக் கிடைத்த அந்தக் கடிதம் அரசின் இரு முக்கிய அங்கங்களான மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகார வர்க்கத்துக்குமிடையேயான உறவுகளைத் தீர்மானிக்கும் அம்சங்கள் குறித்த சில அதிர்ச்சிகரமான உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. தன் கடமையைச் செய்வதில் நேர்மையான அணுகுமுறைகளைக் கொண்ட அரசு அதிகாரி மக்கள் பிரதிநிதிகளின் கோபத்துக்கும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் இரையாவது தடுக்கப்பட முடியாதது போல் தோன்றுகிறது. குறிப்பிட்ட அந்த அதிகாரி தலித்தாக இருக்க நேர்வது இன்னும் சிக்கலானது.

1995ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மாவட்டக் கூடுதல் ஆட்சியராக இருந்த உமாசங்கர் நீதிமன்றத்தில் அப்போதைய ஜெயலலிதா அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த செல்வகணபதி மீது சுமத்தப்பட்ட சுடுகாட்டுக் கூரை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை அளித்ததன் மூலம் கவனம்பெற்றவர். அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் பி.ஆர். சம்பத் கேட்டுக்கொண்டபடி தலித்துகளுக்கான சுடுகாட்டுக் கூரை அமைக்கும் பணியை விதிகளுக்கு முரணாகத் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு அளிக்க மறுத்தார் உமாசங்கர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கொன்றில் உமாசங்கர் தாக்கல்செய்த அபிடவிட்டைப் பரிசீலித்த நீதிமன்றம் மத்தியப் புலனாய்வுத் துறையின் மூலம் இந்த ஊழல் குறித்த விசாரணையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது. 1996 தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதற்கு அப்போது சுமத்தப்பட்ட சுடுகாட்டுக் கூரை ஊழல் குற்றச்சாட்டும் ஒரு காரணமாக அமைந்தது. இதற்காக அடுத்து வந்த திமுக அரசாங்கம் அவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறையின் ஆணையராக நியமித்தது.

ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை ஆணையராகப் பணிபுரிந்தபோது தென்னிந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் பங்குகளைத் திரும்ப அளிப்பது தொடர்பாக நடைபெற்ற முறைகேடுகளில் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதை வெளிக்கொணர்ந்தார். தவிர கிரானைட் சுரங்கங்களைக் குத்தகைக்கு விடுவது தொடர்பாக நடைபெற்ற, அரசுக்கு சுமார் 1,000கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் முறைகேடுகள், உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் 45,000 டிவி ஆன்டெனாக்கள் வாங்கியது தொடர்பான முறைகேடுகள், தமிழ் நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், மதுரை மேகமலையில் வனத் துறைக்குச் சொந்தமான 7106 ஏக்கர் நிலங்களை குறிப்பிட்ட தனிநபர் ஒருவருக்குச் சட்டவிரோதமான முறையில் பட்டா அளித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டார். முன்னாள் முதலமைச்சருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் முன்னாள் தலைமைச் செயலாளர் நாராயணன் ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலருக்கும் மேற்குறிப்பிட்ட முறைகேடுகளில் தொடர்பிருப்பதாகத் தன் விசாரணை அறிக்கையில் உமாசங்கர் குறிப்பிட்டார். தொடர்ந்து, 1999இல் புதிதாக உருவாக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராகப் பணிபுரிந்தபோது சிறப்பாகச் செயல்பட்டதற்காகப் பாராட்டப்பட்ட உமாசங்கர், 2001இல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது புறக்கணிக்கப்பட்டு அதிகாரமற்ற பதவியில் அமர்த்தப்பட்டார். 2006இல் மீண்டும் பதவியேற்ற திமுக அரசாங்கத்தில் கருணாநிதியின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அதிகாரிகளின் பட்டியலில் இடம்பெற்று எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இந்தக் கட்டங்களில் நேர்மையான அதிகாரியாக அவர் எடுத்த நடவடிக்கைகள்தாம் இப்போது அவர் பழிவாங்கப்படுவதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து மீனவர்களுக்காக 45,000 வயர்லெஸ் கருவிகளை வாங்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் உரிய விதிமுறைகளின்படி டெண்டர் கோரப்பட்டு அதனடிப்படையிலேயே வயர்லெஸ் கருவிகளை வாங்க முடியும் எனச் சொல்லி ராஜாத்தி அம்மையாரின் வற்புறுத்தலுக்குப் பணிய உமாசங்கர் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தவிர எல்காட் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சுமார் 700 கோடி ரூபாய் ஊழல் உள்ளிட்ட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு முறைகேடுகளை வலுவான ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்ததால் இப்போது கருணாநிதிக்கு வேண்டாதவராக ஆகியிருக்கிறார்.

மதுரை தினகரன் அலுவலக எரிப்புக்குப் பிறகு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட ‘கருத்து வேறுபாட்டை’த் தொடர்ந்து, கேபிள் தொழிலில் மேலாதிக்கம் பெற்றிருந்த மாறன் சகோதரர்களை ஒழித்துக்கட்டுவதற்காகத் தொடங்கப்பட்ட ‘அரசு கேபிள் நிறுவன’த்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட உமாசங்கர், சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் நிறுவனம் அரசு கேபிள் நிறுவனத்தைச் சீர்குலைக்க முயன்றதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்தார். அதன் காரணமாக மாறன் சகோதரர்களின் கோபத்துக்குள்ளானார். குடும்ப ஒற்றுமையின் விளைவாக அதிகாரத்தை மீளப்பெற்ற மாறன் சகோதரர்களுக்கும் உமாசங்கரின் மீதான பழிவாங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்திருப்பதாகத் தன் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கத் தடை கோரி நீதிமன்றத்தில் உமாசங்கர் தாக்கல்செய்த மனுவில் கருணாநிதி குடும்பத்தினரின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் பழிவாங்கும் நோக்கோடு தன்மீது அப்படியொரு வழக்குத் தொடரப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். வழக்கை விசாரிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து சாதிச் சான்றிதழை மாற்றித் தலித் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பைத் தட்டிப் பறித்ததாக அவசர அவசரமாகக் குற்றம் சுமத்தப்பட்டுத் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தான் பழிவாங்கப்படுவதாக உமாசங்கர் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டை நேரடியாக எதிர்கொள்ள முடியாத திமுக அரசாங்கம் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. திமுக அரசாங்கத்துக்கும் உமாசங்கருக்குமிடையேயான விவகாரங்கள் இப்போது பொதுச்சமூகத்தின் கவனத்துக்கு வந்துள்ளன. உமாசங்கர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குத் திமுக அரசாங்கம் அளிக்கும் பதில் பொதுச்சமூகத்தின் அக்கறைக்குரியதாகும். ஆனால் அரசாங்கம் மௌனம் சாதிப்பதன் மூலமும் சப்பைக்கட்டுக் கட்டுவதன் மூலமும் மக்களை ஏமாற்ற முயல்கிறது.

1990இல் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உமாசங்கரின் சாதிச் சான்றிதழின் உண்மைத் தன்மையைப் பரிசீலித்து ஏற்றுக்கொண்ட பின்னரே தேர்வாணையம் பணி நியமனம் அளித்துள்ளது. தான் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுவதாகச் சொல்லும் உமாசங்கர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமெனக் கோரியிருக்கிறார்.

பல்வேறு தலித் அமைப்புகளும் ஊடகங்களும் ஜெயலலிதா உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் உமாசங்கர் மீதானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் கருணாநிதி அரசு அவர்மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பிடிவாதமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உமாசங்கர் கிறித்தவ மதத்துக்கு மாறிய தலித், ஆகவே அவர் சட்டப்படி பிற்படுத்தப்பட்டவர் என்கிறது அரசுத் தரப்பு. இது தொடர்பாகத் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தில் முறையிட்டிருக்கிறார் உமாசங்கர்.

உமாசங்கர் தொடர்பான சாதிச் சான்றிதழ் பிரச்சினை சமூகத்தில் சாதி என்பதன் பொருள் என்ன, அது எவ்வாறு அர்த்தப்படுத்தப்பட்டு வருகிறது போன்ற வினாக்களை எழுப்புகிறது. தலித் ஒருவர் இந்துவாக இருந்து கிறித்தவராக மதம்மாறி விடும்போது சட்டப்படி அவர் தலித் அல்லாதவராகிவிடுகிறார். ஆனால் சமூகத்தில் அவர் தலித்தாகவே கருதப்படுகிறார். அதனால்தான் தலித் கிறித்தவர்களைப் பட்டியல் இனமாகவே (எஸ்சி) கருத வேண்டுமெனத் தலித் கிறித்தவ அமைப்புகள் கடந்த 20 ஆண்டுகளாகப் போராடிவருகின்றன. இதைப் பற்றி விவாதிக்கும் துணிச்சல் பெற்ற தலித் அமைப்புகள் இல்லை. கடந்த 20 ஆண்டுகளில் இக்கோரிக்கை பெற்றுவிட்ட அழுத்தம் காரணமாகத் தலித் கட்சிகள் மட்டுமல்ல பல அரசியல் கட்சிகளும் தலித் கிறித்தவர்களைத் திருப்திபடுத்தும் முகமாக ஒரு கோரிக்கையாக இதையும் தேர்தல் அறிக்கைகளில் சேர்த்துவிட்டு வழக்கம்போல் கிடப்பில் போட்டுவிடுகின்றன. கடந்த தேர்தல் அறிக்கையில் இக்கோரிக்கையை முன்வைத்த கட்சிகளில் திமுகவும் ஒன்று. அப்படியிருக்கும்போது திமுக உண்மையில் உமாசங்கருக்காகப் போராடியிருக்க வேண்டும்.

அரசாங்கத்தின் வாதப்படி அவர் தலித் கிறிஸ்த்தவர். அதாவது பிற்பட்ட வகுப்பினராகக் கருதப்படுபவர். தலித்துகளுக்கான சலுகையை தலித் கிறித்தவர் ஒருவர் பெறுவதன் மூலம் தலித்தாக இருக்கிற இந்துக்களின் உரிமை பாதிப்புக்குள்ளாகிறது என்பதுதான் அரசின் வாதம். ஒரு வகையில் தலித்துகளின் மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயல் இது. இந்து மதத்தில் நிலவும் தீண்டாமையை எதிர்த்தும் கல்வி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளவுமே பெரும்பாலான தலித் இந்துக்கள் மதம் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது போன்ற ஒரு சட்டம் கல்வி, வேலைவாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு தலித்துகள் தீண்டாமையை ஏற்று, இந்து என்னும் அடையாளத்தைப் பேண வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது. உமாசங்கர் விவகாரத்தை முன்வைத்துத் தலித் அமைப்புகள் இது பற்றி விவாதிக்க வேண்டியது அவசியம் எனத் தோன்றுகிறது.

தலித்துகளுக்கான அரசியல் விழிப்புணர்ச்சிக்குத் தலைமையேற்பதில் ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்களுக்கு முக்கியப் பங்கு எப்போதுமே இருந்துவந்திருக்கிறது. அதிலும் வட்டாரச் சாதியினரால் ஆளப்படும் மாநில ஆட்சியின் ஊழியர்களைவிட மத்திய அரசின் ஊழியர்களாகச் செயல்படுபவர்கள் தலித் பிரச்சினையைத் துணிச்சலாக எதிர்கொள்ள முடியும். இன்றைக்கும் ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் பேணப்படும் அம்பேத்கரின் அடையாளம் மாநில அரசுத் துறை அலுவலகங்களில் இல்லை. தலித் அதிகாரிகள் சமூகச் செயல்பாட்டில் ஈடுபடும்போதெல்லாம் எல்லா ஆட்சியாளர்களாலும் இவ்வாறே அலைக்கழிக்கப்படுகின்றனர். தமிழக அரசுத் துறைகளில் தலித்தரப்புத் தலையீட்டைக் கோரிவந்த ப. சிவகாமி, கிறிஸ்துதாஸ் காந்தி ஆகிய அதிகாரிகள் முன்பு அதிமுக ஆட்சியில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இப்போது உமாசங்கரைத் திமுக பணிநீக்கம் செய்திருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் காளியப்பனை அத்தொகுதியின் திமுக எம்ஏல்ஏ மாலை ராஜா என்பவர் தாக்க முயன்றுள்ளார். கல்லூரிகளையும் மாணவர்களையும் கையாளும் திறனுடைய கல்வியாளர் ஒருவரின் அடையாளம் சாதித் செல்வாக்காலும் கந்துவட்டிப் பணத்தாலும் அதிகாரத்திற்குரியவராக மாறிவிட்ட அரசியல்வாதியின் முன் சிறுத்துப்போகிறது. அதிகாரத்தின் கருணைக்காக அரசியல்வாதியைக் கெஞ்சி நிற்கும் கல்வியாளர்களே உயர்பதவிக்கு வரும்போது அவர்களிடம் தங்களுக்கான கௌரவத்தை எதிர்பார்ப்பவர்களாக அரசியல்வாதிகள் மாறிவிடுகிறார்கள். தமிழகத்தின் பெரும்பான்மையான துணைவேந்தர்களும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஆளும் கட்சியினரால் நியமிக்கப்படுகையில் அவர்களைப் பாராட்ட, கௌரவிக்க விதி மீறிய முன்னுதாரணங்களை ஏற்படுத்தித் தருகின்றனர். விதிமீறல்களே இயல்பாகிவிட்ட நிலையில் விதிமுறையைக் கையாளும் ஒருவர் ‘இயல்பற்றவராகி’விடுகிறார். அவ்வாறு துணைவேந்தர் பட்டமளிப்பு விழாவில் மாலை ராஜாவுக்கு அங்கியளித்து மரியாதை தராத நிலையில் அவரைத் தாக்குகின்றனர்.

துணைவேந்தர் தலித் என்பதால் மட்டும் இது சாதி சம்பந்தப்பட்டது என்று சொல்லவில்லை. ஆனால் அவர் தலித் என்பதும் இங்கு முக்கியம். திமுக மாலை ராஜாவைக் கட்சியைவிட்டு நீக்கவோ கண்டிக்கவோ செய்யாது. ‘மறவர் என்னும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த எம்எல்ஏவைக் கண்டித்துக் கல்வித் துறையைக் காப்பாற்றி ஆகப்போவது என்ன?’ இவ்விடத்தில் துணைவேந்தர் மறவர் சாதியாக இருந்து தலித் எம்எல்ஏ ஒருவர் அவரைத் தாக்குவது பற்றி நாம் கற்பனையும் செய்ய முடியாது. இப்பிரச்சினையில் இதைத்தான் சாதிய நோக்கு என்கிறோம்.

தலித் ஒருவர் அதிகாரியாய் மாறினாலும் அவர் சுயமாகச் செயல்படக் கூடாது என்றே அதிகார வர்க்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். இதில் தலித் தனித்துவமாகச் செயல்படும்போது வெளியேற்றப்படுவதும் சாதகமாகச் செயல்படும்போது அவரின் தலித் அடையாளத்தைச் சுரண்டுவதும் திராவிடக் கட்சிகளின் நடைமுறையாக இருந்துள்ளது. 1970களில் திமுக தலித்துகளுக்கான நிதியை வேறு வழிகளில் செலவழிக்கிறது என்று சொன்னபோது சத்திய வாணிமுத்து வெளியேற்றப்பட்டார். அவர் தாழ்த்தப்பட்டடோர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தபோது சத்தியவாணிமுத்துவுக்கு எதிராக முதன்முதலாகச் சென்னை மாவட்டத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்த இளம்பரிதி என்பவரைத் திமுக முன்னிறுத்தியது. இப்போது உமாசங்கரைப் பணிநீக்கம் செய்த அதேவேளையில் கிறிஸ்துதாஸ் காந்திக்குத் தலைமைச் செயலாளர் பொறுப்பு அளித்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் ஆ. ராசாமீதான ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டபோது அவரது தலித் அடையாளத்தைக் கேடயமாக்கினார் கருணாநிதி. உமாசங்கருக்கு மறுக்கப்பட்ட தலித் அடையாளம் ஊழல் கறைபடிந்த அமைச்சர் ஆ. ராசாவுக்குப் பொருந்துவது எவ்வாறு? ராசாவின் தலித் அடையாளம் தலித்துகளுக்காகப் பயன்படுவதைவிடக் கருணாநிதி குடும்பத்திற்குப் பயன்படுகிறது. உமாசங்கரின் அடையாளம் கருணாநிதி குடும்பத்திற்குப் பயன்படாமல் தலித்துகளுக்குப் பயன்படுகிறது. இங்கேதான் ஆ. ராசா ஆசீர்வதிக்கப்படுவதும் உமாசங்கர் பழிவாங்கப்படுவதும் நடக்கின்றன.

துணைவேந்தர் காளியப்பனை எம்எல்ஏ தாக்க முயன்றது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்த் தண்டனைக்குரியது. இச்சட்டம் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில் இந்தியா முழுக்கச் சுணக்கம் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் தமிழகம் வந்து சென்ற தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையம் தமிழக அரசை இக்காரணத்திற்காகக் கண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்சி/எஸ்டி ஆணையத்தையும் கருணாநிதி மிரட்டும் அறிக்கையை வெளியிட்டதோடு திமுக சார்பாக எதிர்ப்புச் சுவரொட்டிகள்கூட ஒட்டப்பட்டன. 2006ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் கயர்லாஞ்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தலித்துகள் நால்வர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் கடந்த 14.7.2010இல் தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்றம் அக்கொலை எஸ்சி/எஸ்டி வன் கொடுமை வழக்கிற்குள் வராது என்று சொல்லியுள்ளது.

முன்பு திமுக அமைச்சர் சுரேஷ்ராஜன்மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை என்ற கோரிக்கை எழுந்தபோது அவர் திராவிட இயக்கத்தவர் என்பதை மட்டுமே கருணாநிதி சுட்டிக்காட்டினார். திராவிட இயக்கம் இல்லாத உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி என்ற தலித் பெண் முதல்வராக வர முடிவதும் திராவிட இயக்கம் செல்வாக்குப் பெற்றுத் திகழும் தமிழகத்தில் பாப்பாப்பட்டியிலும் மேலவளவிலும் தலித் ஒருவர் பஞ்சாயத்துத் தலைவராக முடியவில்லை என்பவையே நிதர்சனங்கள். திராவிட அடையாளத்தைப் பயன்படுத்துவது கருணாநிதியின் ஒருவகைத் தந்திரமே. கடவுள், மனுதர்மம், இந்து மதம் போலவே நாத்திகம், சமூகநீதி, திராவிடம்கூடச் சாதியைக் கடந்தவையாக இருந்துவிடவில்லை என்பதே அனுபவம்.

தலித் அமைப்புகள் எழுச்சி பெறுவதற்கு முன்பு இருந்த நிலைமையே மீண்டும் உருவாகியிருப்பதாகத் தோன்றுகிறது. தலித்துகளின் உரிமைகளுக்கான போராட்டங்களும் அழுத்தங்களும் குறைந்துவிட்டன. திராவிடக் கட்சிகளின் தலித் விரோதம் குறித்துப் பேசியவர்களும் எழுதியவர்களும் அதிகார அரண் மனையின் அடுக்களைகளில் பூசனம் பிடித்துக்கிடக்கிறார்கள். கட்சிகளோ ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்து தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கின்றன.

Saturday, September 25, 2010

பாரதி படித்தேன்

பாரதி படித்தேன்
பாரதி படித்தேன்

பாரதி படித்தேன்,
எண்ணங்கள் மாறின.
காலம் கடந்தது,
மறந்து விட்டேன்.
மீண்டும் படித்தேன்,
அதே மலர்ச்சி.

ஆனால்..

கடந்த நொடிகளால்,
நான் முழுமையாக
அவனில்லை என்றெண்ணும்போது
லேசான இறுக்கம்

பாரதி (Subramanya Bharathi (சுப்பிரமணிய பாரதி )) படித்தேன்....

Friday, September 24, 2010

நட்பா? காதலா?

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்

எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.
... சஞ்சு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை (ஆங்கிலம்:Pudukkottai), இந்திய மாநிலமான தமிழ் நாட்டிலுள்ள ஒரு மாவட்டத் தலைநகரமாகும். புதுக்கோட்டை 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் நாள் மாவட்டமாக மலர்ந்தது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்) 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்

ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.

இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.

"மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271)

"மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44)

"கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம்.

"சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.

பிராமிக் கல்வெட்டு

பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் கி.மு 200 முதல் கி.பி 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன. சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது.

"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்"

என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில்(அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது).

சமணமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன.

சங்ககாலம்

சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும்.

"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமில் பன்னிரு நாடென்"

என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்கு தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது.

பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு புறநானூறு 71வது பாடலில் கூறப்படுகிறது. அகநானூற்றில் 25வது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள். புறநானூறு 246, 247வது பாடல் இவள் பாடியதாகும்.

சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

[தொகு] புதுக்கோட்டையில் ரோமாபுரி

திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு, முத்து மணிவகைகள், பருத்தி, பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு மெந்துகிலும், நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.)

இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம்,

மன்னர்கள்
அகஸ்டஸ் சீசர் (கி.மு 29 - கி.பி 14)
டைபீரியஸ் சீசர் (கி.பி 14 - கி.பி 27)
நீரோ ட்ரூசஸ்(கி.மு 38 - கி.பி 9)
அந்தோனியா(ட்ரூசஸ் மனைவி)
ஜெர்மானிக்கஸ்
அக்ரிபின்னா(ஜெர்மானிக்ஸ் மனைவி)
காலிகுலா(கி.பி 37 - 41)
டைபிரியஸ் க்ளாடியஸ் (கி.பி 41 - 54)
நீரோ (கி.பி 54 - 68)
வெஸ்பாசியானஸ்(கி.பி 69 - கிபி 79)

நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை பாதுகாக்கப்பட்டு சென்னை,புதுக்கோட்டை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.

களப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)

பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.

முதல் பாண்டியப் பேரரசு

புதுக்கோட்டை பகுதி பாண்டியன் கடுங்கோனின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் ரணதீரன்(கி.பி 710 - 740), மாறன் சடையன்(கி.பி 765 - 815), ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன்(இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), வரகுணவர்மன்(கி.பி 862 - 880) வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது.

பல்லவர்

புதுக்கோட்டைப் பகுதியில் கி.பி 8ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின்(கி.பி 710 - 765) மூன்றாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று குன்னாண்டவர்கோவிலிலும் மற்றொன்று ராசாளிப்பட்டியிலும் காணப்படுகிறது. இக்காலத்திலேயே பல்லவர் ஆட்சி புதுக்கோட்டையில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

தந்திவர்மன்(கி.பி 775 - 826), நிருபதுங்கவர்மன்(கி.பி 849 - 875) என பல்லவர் ஆட்சி பரவியிருந்ததையும் மேலும் பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதி மாறிமாறியிருந்ததையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நிலையை நிர்ணயித்த போர்க்களங்கள் புதுக்கோட்டையில் நிறைய உண்டு என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

முத்தரையர்

தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்தரையர் குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.

முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்